வியாழன், 29 செப்டம்பர், 2011

பெண் இதயம்


பத்து
மனிதர்களின் 
கண்களை விட 
ஒரு பெண்ணின்
இதயம் 
அதிகம் 
பார்க்கிறது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குதிரை சவாரி


அகம்பாவம் 
ஒரு 
பொல்லாத குதிரை 
ஒரு முறையாவது 
தன் மேல் சவாரி 
செய்யும் 
எஜமானை 
கீழே தள்ளாமல் 
விடாது .

திங்கள், 26 செப்டம்பர், 2011

தவறான பாதை


தவறான 
பாதையில்
வெகுதொலைவில் 
வந்தாலும் 
திரும்பிச்செல் ..!

வியாழன், 22 செப்டம்பர், 2011

யோசனை




உனக்கு 
நிறைய 
தெரிந்திருந்தாலும்
உன்

தொப்பியிடமும் 
யோசனை கேள்

“என் நண்பனின் புத்தகம்”.

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல்
 

இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர்
 “என் நண்பனின் புத்தகம்”.

புதன், 21 செப்டம்பர், 2011

நம்பிக்கை


மனிதன்
உணவின்றி
40 நாட்களும்
நீரின்றி 
3 நாட்களும்
காற்றின்றி 
3 நிமிடமும் 
உயிர் வாழலாம்.
ஆனால் 
நம்பிக்கையின்றி 
3 நொடிகூட 
வாழ இயலாது.

அடக்கம்



அடக்கம்
 நல்லதுதான். 
ஆனால் 
அது 
அடிமைத்தனமாக 
இருக்கக் கூடாது.

சொற்கள்

சொற்கள்
நம் சிறந்த 
உடைகள்
அவற்றைக் 
கந்தலாகவும், 
கிழிசல்களாகவும், 
அழுக்காகவும் 
உடுத்தக் கூடாது.

சுமை

சுமை 
அதிகமாகத் 
தோன்றத் தோன்ற 
நீங்கள் 
மேலே 
ஏறிக் 
கொண்டிருக்கிறீர்கள் 
என்று பொருள்

வாழ்க்கை.



தாமரையிலையிலே 
உருண்டோடும் 
பனித்துளி 
போன்றது 
மனித 
வாழ்க்கை. 

திங்கள், 19 செப்டம்பர், 2011

உழைப்பு



சும்மாயிருந்து
துருப்பிடித்து 
அழிவதை விட, 
உழைத்துத் 
தேய்வது 
சிறந்தது. 

விரல்கள்


ஒரு
மனிதனின் 
சிறந்த 
நண்பர்கள் 
அவனது 
பத்து 
விரல்களே.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மரம்


மரம் 
சும்மா
இருந்தாலும் 
காற்று 
அதை 
சும்மா 
இருக்க 
விடுவதில்லை.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பாம்பும்,புறாவும்...


பாம்புகளைப் 
போல 
விவேகமும், 
புறாக்களைப் 
போல 
கபடமில்லாமலும் 
இருங்கள்.

அன்பு



உலகத்தில் 
மிகவும் 
மலிவான 
பொருள் 
அன்புதான்.
அதை 
வாங்குகிறவனுக்கும், 
விற்பவனுக்கும் 
பன்மடங்கு 
லாபத்தைத் தரும்.

இசை

கோபதாபம்
மனிதர்களுக்கு
மட்டுமல்ல 
இசைக்கும் 
உண்டு. 
இசையின் 
மூலம் 
அமைதியைக் 
காட்ட முடியும். 
கோபதாபத்தையும் 
காட்ட முடியும்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

காதல்

காதல் 
ஒரு 
கண்ணாடி 
குவளை; 
இறுக்கமாக 
பிடித்தால், 
உடைந்து 
விடும்; 
மெதுவாக 
பிடித்தால், 
கை நழுவி 
உடைந்து விடும்.

அம்மா


எல்லா 
இடங்களிலும் 
கடவுள் 
இருக்க முடியாது. 
ஆகவே அவர்
தாயைப்
படைத்தார்.

ஒற்றுமை



ஆடுகளின் 
ஒற்றுமை 
சிங்கத்தைப் 
பட்டினியாகப் 
படுத்திருக்கச் 
செய்கிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வாழ்க்கை



ம‌னித‌ன் 
எப்ப‌டி வாழ்வ‌து 
என்று 
ஒவ்வொரு 
நாளும் 
க‌ற்றுக்கொண்டிருக்கிறான்...
ஆனால் ,
ஒரு நாளும் 
அப்ப‌டி 
வாழ்வ‌தில்லை..!

மனம்


உன்
கண்கள்  
அழகாக இருந்தால் ,
மற்றவர்கள் 
உனக்கு 
அழகாக தெரிவார்கள் ...!
உன் 
மனம் 
அழகாக இருந்தால் ,
மற்றவர்களுக்கு 
நீ 
அழகாக தெரிவீர்கள் ...!

சிங்க‌ம்




கோவில்களில்
 பலியிடுவது 
ஆடு மாடுகளைத்தான்;                                    
 சிங்கங்களை அல்ல!

முதலாளி ஆக‌லாம்..!



முதலில்
வேலைக்காரனாக 
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 
முதலாளி ஆகும்
 தகுதி தானாகவே வரும்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

ஏமாளி



பிறரைவிடத் 
தான் புத்திசாலி 
என்று ஜம்பம் 
பேசுபவன்..!
ஆனால் ,
எளிதில்
பிறரிடம் 
ஏமாந்து   
விடுவான்.


கோடாரி



மிகவும்
உயரமான 
மரத்திற்குக் கூட, 
அடியில் 
கோடாரி 
காத்துக் 
கொண்டிருக்கிறது.

புதன், 7 செப்டம்பர், 2011

இரண்டாவ‌து வெற்றி ...!




வெற்றி
பெற்ற பின்
தன்னை அடக்கி
வைத்துக் கொள்பவன் 
இரண்டாம்முறை 
வென்ற 
மனிதனாவான்.



முதுகில் ஏறாதே..!



நீ 
வாழ்க்கையில்
முன்னேற 
வேண்டுமானால் 
உன்னுடைய 
கால்களால் 
நடந்து போ. 
மற்றவர்களின் 
முதுகின் 
மேல் ஏறிப் 
போக விரும்பாதே. 


வழி




முன் 
யோசனையுள்ளவன் 
வெளியே 
வருவதற்கும்
வழியைத் தெரிந்து 
கொண்டுதான்
உள்ளே 
நுழைவான். 



நேசம்


நீங்கள் 
நேசிக்கப்பட 
வேண்டுமென்றால் , 
நேசிப்பதற்கு 
அருகதை 
உடையவராய் 
இருங்கள்.


செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மனிதனாக இரு !


நீங்கள்
 மருத்துவராக இருக்கலாம் ,
பொறியாளராக இருக்கலாம், 
வழக்கறிஞர் ராக இருக்கலாம் ,
ஆசிரியராக இருக்கலாம்,
அமைச்சராக இருக்கலாம் ,
அரசு அதிகாரியாக இருக்கலாம் , 
கம்பெனிகளில் மேல் அதிகாரியாக இருக்கலாம் , 
அலுவலக பணியாளராக இருக்கலாம், 
உடல் உழைப்பாளியாக இருக்கலாம், 
யாராக இருந்தாலும் ....
முதலில் 
மனிதனாக இருங்கள் ...!



திங்கள், 5 செப்டம்பர், 2011

வணக்கம்


வணக்கம் 
சொல்லுவதில் 
முந்திக்கொள்ளுகள்.. 
உங்கள் 
வாழ்க்கை 
வளமாகும் ...

திறமை


திறமை 
என்பது முள் ளைப்போல
 இருக்க வேண்டும் ...
காலில் 
மிதித்தவர்களை 
எல்லாம் கையால் 
எடுக்க வைக்க 
வேண்டும்..!  

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கடல் அலை


நினைவுகள்
என்பது கடல் அலைபோல ... 
அருகில் வரும் போது 
அதை விட்டு விலக தோன்றும் ... 
தொலைவில் இருக்கும் போது
ரசிக்க தோன்றும் ...

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

திரும்பி பார்க்காதே ...


 இனியவளே ....
 மீண்டும் ஒரு முறை 
 என்னை திரும்பி பார்க்காதே ...
 இழப்பதற்கு 
 இல்லை 
 இன்னொரு
 இதயம் ...!