புதன், 19 அக்டோபர், 2016

குழந்தை மனசு

குழந்தை மனசு

எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்கு சென்றேன் கையை பிடித்துக் கொண்டு மகளுடன்.

ஏம்மா நம்ம வீட்டு
எறும்புக்கெல்லாம் உடம்பு சரி இல்லையா என கேட்டாள் அப்பாவியாக.

மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!!

நிரநதரமில்லை...

நிரநதரமில்லை...

அழுகின்ற
வினாடியும்
சிரிக்கின்ற
நிமிடங்களும்
நம்
வாழ்க்கை 
என்ற
காலகடிகாரத்தில்
நிரந்தரமாக
அமைவதில்லை...