ஞாயிறு, 11 டிசம்பர், 2011

குற்றம்



அன்பு 
குறைந்த 
இடத்தில் 
குற்றங்கள் 
பெரிதாகத் 
தெரியும். 

வியாழன், 8 டிசம்பர், 2011

உழைப்பு

உழைப்பு
எந்த
மனிதனையும்
ஏமாற்றியதில்லை.,
மனிதன்தான்
உழைப்பை
ஏமாற்றுகிறான்...

வாழ்க்கை


தவறு 
செய்யும்
மனிதனை
பார்த்து 
தவறாக
பேசாதீர்கள் !
உங்கள்
வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை...

பட்டம்


தெருவில்
கிடக்கும் 
காகிதமாக
யாரையும்
நினைக்காதே..
நாளை
அது 
பட்டமாக 
பறந்தால்
நீ
கூட
சற்று
நிமிர்ந்து
பார்பாய்... 

செவ்வாய், 6 டிசம்பர், 2011

செல்வம்

ஆடம்பரம் 
என்பது 
நாம் 
தேடிக்கொள்ளும் 
வறுமை . 
எளிமை 
என்பது 
நம்மை 
தேடிவரும் 
செல்வம் ...!

புதன், 30 நவம்பர், 2011

திங்கள், 28 நவம்பர், 2011

மௌனம்


நீ
பேசும்
வார்த்தை
எல்லோருக்கும்
புரியும்…!
ஆனால்
நீ
பேசாத
மௌனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே
புரியும்…!

புதன், 23 நவம்பர், 2011

கதவுகள்


நல்லவரோ,
கெட்டவரோ,
மரியாதையுடன்
சென்றால்
கதவுகள்
திறக்கின்றன ...

மரியாதை

 மரியாதையைப் 
போல
மலிவான, 
அதேநேரம்
மதிப்புமிக்க
பொருள்
வேறில்லை...

செவ்வாய், 22 நவம்பர், 2011

சமாதானம்


சண்டைக்குப் 
பின் வரும் 
சமாதானத்தைவிட, 
என்றும் 
சண்டையே 
இல்லாத 
சமாதானம்தான் 
நமக்கு 
வேண்டும் ...


விசித்திரமான கல்லூரி

உலகம் 
ஒரு 
விசித்திரமான 
கல்லூரி. 
இங்கே 
பாடம் 
சொல்லிக்கொடுத்துத் 
தேர்வு 
வைப்பது 
இல்லை. 
தேர்வு 
வைத்த 
பிறகே 
பாடம் 
கற்பிக்கப்படுகிறது ...

ஞாயிறு, 20 நவம்பர், 2011

அடியெடுத்து

முன்னேற்றத்தை 
நோக்கி 
அடியெடுத்து 
வையுங்கள் . 
அது 
எவ்வளவு 
சிறியதாக 
இருந்தாலும் 
பரவாயில்லை .

செவ்வாய், 15 நவம்பர், 2011

சேறு



சேற்றில் 
விழுவது 
இழிவில்லை , 
அங்கேயே 
கிடப்பது 
தான் 
இழிவு . 

புதன், 2 நவம்பர், 2011

இதய ரோஜா



உன் 
இதயம் 
ரோஜாமலராயிருந்தால் 
பேச்சில் 
அதன் 
வாசனை 
தெரியும்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

பலவீனம்



தன்னை 
அதிக 
புத்திசாலியாக 
எண்ணுவதே 
மனிதனிடம் 
உள்ள 
மிகப் பெரிய
பலவீனம்...

திங்கள், 31 அக்டோபர், 2011

மின்மினிப் பூச்சி



மின்மினிப் பூச்சி 
எவ்வளவு 
ஒளியுடன் 
திகழ்ந்தாலும் 
அது 
தீ 
ஆகாது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011


எல்லாருக்குமே 
உங்கள் 
காதைக் கொடுக்கலாம்...
ஒரு சிலரிடம் 
மட்டுமே 
வாயைக்கொடுக்கலாம்...

சர்க்கரை



முழுக்க 
முழுக்க 
சர்க்கரையாக 
இருந்து 
விடாதே;
உலகம் 

உன்னை 
விழுங்கி 
விடும்.


கடிகாரத்தில் 
நேரத்தைப் 
பார்க்காமல் 
கடினமாக 
உழைத்ததால்தான் 
என்னால் 
புதிய பொருட்களைக் 
கண்டுபிடிக்க 
முடிந்தது 
- தாமஸ் ஆல்வா எடிசன்.

திங்கள், 10 அக்டோபர், 2011

சிலந்திப் பூச்சி



ஒட்டடைக் குச்சி 
ஓய்வு 
எடுத்துக்கொண்டால் 
சிலந்திப் பூச்சி 
சிம்மாசனம் 
ஏறும் ...

வியாழன், 6 அக்டோபர், 2011

அவசரக் காதல் ..!


அவசரக்  
காதல் 
சீக்கிரம் 
சூடாகி 
சீக்கிரம் 
குளிர்ந்து 
விடும் .

காபியும்... காதலும் ...


காபியும் 
காதலும் 
சூடாக 
இருக்கும் 
வரை 
தான் 
ருசியாக 
இருக்கும் ,

புதன், 5 அக்டோபர், 2011

திங்கள், 3 அக்டோபர், 2011

அந்துப்பூச்சி


ஆயிரம்
களம் 
நெல்லை
அழிக்க 
ஒரு 
அந்துப்பூச்சி 
போதும் .

வியாழன், 29 செப்டம்பர், 2011

பெண் இதயம்


பத்து
மனிதர்களின் 
கண்களை விட 
ஒரு பெண்ணின்
இதயம் 
அதிகம் 
பார்க்கிறது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குதிரை சவாரி


அகம்பாவம் 
ஒரு 
பொல்லாத குதிரை 
ஒரு முறையாவது 
தன் மேல் சவாரி 
செய்யும் 
எஜமானை 
கீழே தள்ளாமல் 
விடாது .

திங்கள், 26 செப்டம்பர், 2011

தவறான பாதை


தவறான 
பாதையில்
வெகுதொலைவில் 
வந்தாலும் 
திரும்பிச்செல் ..!

வியாழன், 22 செப்டம்பர், 2011

யோசனை




உனக்கு 
நிறைய 
தெரிந்திருந்தாலும்
உன்

தொப்பியிடமும் 
யோசனை கேள்

“என் நண்பனின் புத்தகம்”.

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல்
 

இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர்
 “என் நண்பனின் புத்தகம்”.

புதன், 21 செப்டம்பர், 2011

நம்பிக்கை


மனிதன்
உணவின்றி
40 நாட்களும்
நீரின்றி 
3 நாட்களும்
காற்றின்றி 
3 நிமிடமும் 
உயிர் வாழலாம்.
ஆனால் 
நம்பிக்கையின்றி 
3 நொடிகூட 
வாழ இயலாது.

அடக்கம்



அடக்கம்
 நல்லதுதான். 
ஆனால் 
அது 
அடிமைத்தனமாக 
இருக்கக் கூடாது.

சொற்கள்

சொற்கள்
நம் சிறந்த 
உடைகள்
அவற்றைக் 
கந்தலாகவும், 
கிழிசல்களாகவும், 
அழுக்காகவும் 
உடுத்தக் கூடாது.

சுமை

சுமை 
அதிகமாகத் 
தோன்றத் தோன்ற 
நீங்கள் 
மேலே 
ஏறிக் 
கொண்டிருக்கிறீர்கள் 
என்று பொருள்

வாழ்க்கை.



தாமரையிலையிலே 
உருண்டோடும் 
பனித்துளி 
போன்றது 
மனித 
வாழ்க்கை. 

திங்கள், 19 செப்டம்பர், 2011

உழைப்பு



சும்மாயிருந்து
துருப்பிடித்து 
அழிவதை விட, 
உழைத்துத் 
தேய்வது 
சிறந்தது. 

விரல்கள்


ஒரு
மனிதனின் 
சிறந்த 
நண்பர்கள் 
அவனது 
பத்து 
விரல்களே.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மரம்


மரம் 
சும்மா
இருந்தாலும் 
காற்று 
அதை 
சும்மா 
இருக்க 
விடுவதில்லை.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பாம்பும்,புறாவும்...


பாம்புகளைப் 
போல 
விவேகமும், 
புறாக்களைப் 
போல 
கபடமில்லாமலும் 
இருங்கள்.

அன்பு



உலகத்தில் 
மிகவும் 
மலிவான 
பொருள் 
அன்புதான்.
அதை 
வாங்குகிறவனுக்கும், 
விற்பவனுக்கும் 
பன்மடங்கு 
லாபத்தைத் தரும்.

இசை

கோபதாபம்
மனிதர்களுக்கு
மட்டுமல்ல 
இசைக்கும் 
உண்டு. 
இசையின் 
மூலம் 
அமைதியைக் 
காட்ட முடியும். 
கோபதாபத்தையும் 
காட்ட முடியும்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

காதல்

காதல் 
ஒரு 
கண்ணாடி 
குவளை; 
இறுக்கமாக 
பிடித்தால், 
உடைந்து 
விடும்; 
மெதுவாக 
பிடித்தால், 
கை நழுவி 
உடைந்து விடும்.

அம்மா


எல்லா 
இடங்களிலும் 
கடவுள் 
இருக்க முடியாது. 
ஆகவே அவர்
தாயைப்
படைத்தார்.

ஒற்றுமை



ஆடுகளின் 
ஒற்றுமை 
சிங்கத்தைப் 
பட்டினியாகப் 
படுத்திருக்கச் 
செய்கிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வாழ்க்கை



ம‌னித‌ன் 
எப்ப‌டி வாழ்வ‌து 
என்று 
ஒவ்வொரு 
நாளும் 
க‌ற்றுக்கொண்டிருக்கிறான்...
ஆனால் ,
ஒரு நாளும் 
அப்ப‌டி 
வாழ்வ‌தில்லை..!

மனம்


உன்
கண்கள்  
அழகாக இருந்தால் ,
மற்றவர்கள் 
உனக்கு 
அழகாக தெரிவார்கள் ...!
உன் 
மனம் 
அழகாக இருந்தால் ,
மற்றவர்களுக்கு 
நீ 
அழகாக தெரிவீர்கள் ...!

சிங்க‌ம்




கோவில்களில்
 பலியிடுவது 
ஆடு மாடுகளைத்தான்;                                    
 சிங்கங்களை அல்ல!

முதலாளி ஆக‌லாம்..!



முதலில்
வேலைக்காரனாக 
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 
முதலாளி ஆகும்
 தகுதி தானாகவே வரும்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

ஏமாளி



பிறரைவிடத் 
தான் புத்திசாலி 
என்று ஜம்பம் 
பேசுபவன்..!
ஆனால் ,
எளிதில்
பிறரிடம் 
ஏமாந்து   
விடுவான்.


கோடாரி



மிகவும்
உயரமான 
மரத்திற்குக் கூட, 
அடியில் 
கோடாரி 
காத்துக் 
கொண்டிருக்கிறது.