புதன், 19 அக்டோபர், 2016

குழந்தை மனசு

குழந்தை மனசு

எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்கு சென்றேன் கையை பிடித்துக் கொண்டு மகளுடன்.

ஏம்மா நம்ம வீட்டு
எறும்புக்கெல்லாம் உடம்பு சரி இல்லையா என கேட்டாள் அப்பாவியாக.

மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!!

நிரநதரமில்லை...

நிரநதரமில்லை...

அழுகின்ற
வினாடியும்
சிரிக்கின்ற
நிமிடங்களும்
நம்
வாழ்க்கை 
என்ற
காலகடிகாரத்தில்
நிரந்தரமாக
அமைவதில்லை...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

கடமை

கடமை

நான் பண்பும் பெரூமையும்
உள்ள என்னுடைய கடமை
யிலிருந்து விலகி போகமாட்
டேன், என்னுடைய மக்களி
ன் நல்ல நியாயமான உரி
மைகளை விட்டுக் கொடுக்க
மாட்டேன். அதற்காக நீங்கள்
அருகாமையில் உள்ள தெரு
விளக்கு கம்பத்தில் என்னை
தூக்கு போட்டாலும் கவலை
இல்லை.
-புரட்சியாளர் அம்பேத்கர்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பச்சோந்தி ...

பச்சோந்தி ஒன்று தற்கொலை
செய்யும் முன் ஒரு
கடிதத்தில்
இப்படி எழுதி இருந்தது....!
நிறம் மாறும் போட்டியில்-
மனிதர்களிடம்-
நான் தோல்வி அடைந்தேன்....!